Sunday, 7 November 2010
உன்னாலே...
Monday, 6 September 2010
மரமாய் நான்...
Wednesday, 21 July 2010
காதல் என்றால்...
Sunday, 18 July 2010
நீ நிலா
Wednesday, 7 July 2010
லூசுப்பையன் லூசுப்பொண்ணு
Thursday, 1 July 2010
எப்போது?
Wednesday, 26 May 2010
ஓவியத்துக்குள் ஓவியம்
Friday, 14 May 2010
அடியா.. கடியா..
விழுகிற ஒவ்வொரு அடியும்
ஏறிப்போற படி மாதிரி.
எவ்வளவு அடி விழுகுதோ
அவ்வளவு மேல நாங்க போவோம்...
ஆனா இடி விழுந்தா
ஒரேடியா மேல போயிடலாம்!!!
குழம்பின குட்டையில மீன் பிடிக்கமுடியாது என்று சொன்னங்க....
நானும் குட்டை தெளியிர வரைக்கும் காத்திருந்து வலையை விசினேன்.
ஆனால் மீன் பிடிபடவில்லை. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தேன்.
"மீன் இல்லாத குட்டையிலையும் மீன் பிடிக்கமுடியாது!!!"
முதல் தடவை விமானத்தில் பறக்கும் போது
உயரத்தில் நான் இருப்பதை எண்ணி பெருமை கொண்டேன்.
ஆனால் விமானம் என்னதான் ஆயிரம் அடி உயரத்துல பறந்தாலும்
விமானநிலையம் வந்தா கீழே இறங்கித்தான் ஆகணும்!!!
நேற்று கிடைச்சது இன்னைக்கு கிடைக்காது
இன்னைக்கு கிடைக்கிறது நாளைக்கு கிடைக்கபோறதில்லை
நாளைக்கு கிடைக்கபோறது என்றைக்கும் கிடைத்துக்கொண்டிருக்காது.
அதனால கிடைக்கிறத கிடைச்ச அன்னைக்கே அனுபவிச்சா கிடைச்ச அந்த சந்தோசம் மட்டும் என்னைக்கும் கிடைக்கும்!!!
வாழ்ந்த அனுபவத்தின் மூலம் சொல்பவனின் தத்துவத்தில் பல அடிகள் இருக்கும்
ஆனா சும்மா பொழுது போகாம சொல்லுர தத்துவத்தில் பல கடிகள் தான் இருக்கும்!!!
Monday, 10 May 2010
பூவுக்கே பூச்செண்டா?
கண்ணாடி அணிந்து கொள்.. என்றேன்
ஏன் என்கிறாய்?
வண்டுகளும் தேனீக்களும்
உன் கண்களுக்குள் புகுந்து விடாதா என்ன...
சாலையில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களை மிதிக்காமல்
நீ எட்டி எட்டி நடந்து வருகிறாய்...
ஆனால் நீயேன் அறியவில்லை
ஒரு பூ மிதித்து இன்னொரு பூவுக்கு எப்படி வலிக்கும் என்று...
உலக சமாதானத்தைப்பற்றி பேசிய ஒருவர் சொன்னார்
உலகத்தை வெள்ளைப்பூக்களால் நிரப்புங்கள் என்று...
மறுநாளே நான் நிரப்பிவிட்டேன்
உனக்கொரு வெள்ளை நிற சுடிதார் வாங்கித்தந்து...
காதலர் தினத்தில் காதலிக்கு பூக்கொடுப்பவர்களை
கண்டு கோவப்பட்டேன் பொறாமையால் அல்ல
பூவுக்கே பூச்செண்டா?
Tuesday, 30 March 2010
பயணம்
Monday, 29 March 2010
என்னிடம் இல்லா நாட்கள்

உறக்கமின்றி களைத்திருந்தாலும் உடல் துடிப்பாகவே இயங்குகின்றது.
கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியிருக்கின்றது.
ஒவ்வொரு கண்ணிமைக்கும் நேரத்திலும் தூங்கி எழுகின்றேன்.
வழமையை விட கண் அதிகமாகவே இமைக்கின்றது.
உண்ணாமலே உடல் உழைகின்றது.
உண்பதற்கு உண்மையிலேயே மறந்துவிட்டேன்.
உண்டியையும் மூச்சுக்காற்றால் நிரப்புகின்றேன்.
இரவையும் பகலையும் பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.
இரண்டும் கலந்த வினோத நாட்களாக நகர்கின்றன நாட்கள்.
மூளையின் அனைத்து கட்டுப்பாட்டு மையமும்
கட்டுப்பாட்டை இழந்து விட்டது.
கட்டையை சுற்றி வரும் காளை போல
ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகிறது எண்ணங்கள்.
Friday, 26 March 2010
சமாதானம்
Tuesday, 23 March 2010
தனிமை
Monday, 8 March 2010
காதலை(ப்)பற்றி...
காதலைப்பற்றி என் அறிவுக்கு எட்டிய தூரம் அல்லது என் பார்வையில் காதல்.... இந்தப்பார்வை அல்லது காதல் பற்றிய எண்ணம் இன்று எனக்கு சரியாக இருக்கலாம். நாளை பிழையாகவோ அல்லது வேறு வடிவமாகவோ மாறிவிடலாம். நேற்றுவரை காதல் என்பது தெரியாத மொழியாகவும் அதைப்பற்றி அதிகளவு தெரியாமலும் இருந்தது.
அதற்காக இன்று நான் காதலில் வீழ்ந்தவன் என்று அர்த்தமில்லை. இப்பொழுது எனக்கு கிடைத்திருக்கும் தனிமையும் நேரமும் எனது வயதும்கூட காதலைப்பற்றி எண்ண என்னை தூண்டியிருக்கலாம்.
யாரிடம்...
நம் வாழ்கையில் தினமும் எவ்வளவோ இடங்களுக்கு செல்கின்றோம். எத்தனையோ மனிதர்களை சந்திக்கின்றோம். அதில் பல மனிதர்களை கண்டும் காணாமல் செல்கின்றோம். சிலரிடம் ஒரு புன்னகையை மட்டும் விட்டு செல்கிறோம். சிலரிடம் சில நாள் பழக்கம். ஒரு சிலரிடம் தொடர்ந்து பழகும் சந்தர்ப்பங்கள்.... இதில் யாரிடம் காதல் தோன்றுகின்றது..
ஒரு கொள்கலனில் அடைக்கப்பட்ட வாயு மூலக்கூறுகளின் இயக்கம் பற்றியும் அவை ஒவ்வொன்றுடன் மோதிக்கொள்ளும் போது இரசாயன தாக்கம் ஏற்படுகின்றது என்ற விஞ்ஞான கொள்கை நிலவுகின்றது. அந்த மூலக்கூறுகள் அவை ஏற்படுத்தும் எல்லா மோதல்களிலும் தாக்கம் ஏற்படும் என்றில்லை. இரு மூலக்கூறுகள் சரியான நேரத்தில் சரியான வேகத்துடன் சரியான பகுதியில் மோதிக்கொள்ளும் போதே தாக்கம் ஏற்பட்டு மற்றைய மூலக்கூற்றுடன் பிணைப்பை ஏற்படுத்தும். பிணைப்பை ஏற்படுத்திய மூலக்கூறு வேறு பல மூலக்கூறுகளுடன் மோதி இருக்கலாம். பிணைப்பை ஏற்படுத்திய மூலக்கூறுடன் ஏற்கனவே மோதலை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் பிணைப்பை ஏற்படுத்தும் சரியான மோதல் ஏற்படுகையிலேயே தாக்கம் நிகழும்.
மூலக்கூறுகளை காதலராகவும் மோதல்களை சந்திப்புகளாகவும் தாக்கத்தை காதலாகவும் பிணைப்பை பின்னர் ஏற்படும் உறவாகவும் பிரதியிடுப்பார்த்தால்...
இதனையே காதல் யாரிடம் தோன்றுகின்றது என்ற வினாவுக்கு விடையாக கொள்ளலாமா?
நம் காதலராக அமையப்போகின்றவரை காதலுக்கு முன்னர் சில/ பல தடவைகள் சந்தித்து இருக்கலாம். ஆனால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருவரது எண்ணமும் ஒருமிக்க சந்தித்து கொள்ளும் போது காதல் என்னும் தாக்கம் ஏற்படுகிறதோ என்று எண்ண தூண்டுகின்றது.
Monday, 15 February 2010
என் மொழி சொல்லும் காதல்
காற்று சொல்லிவிடுகிறது தென்றலாய்...
புல் மீது கொண்ட காதலை
இரவு சொல்லிவிடுகிறது பனித்துளியாய்...
புவி மீது கொண்ட காதலை
நிலவு சொல்லிவிடுகிறது பௌர்ணமியாய்...
மண் மீது கொண்ட காதலை
விண் சொல்லிவிடுகிறது மழையாய்...
கரை மீது கொண்ட காதலை
கடல் சொல்லிவிடுகிறது அலையாய்...
கல் மீது கொண்ட காதலை
சிற்பி சொல்லிவிடுகிறான் சிலையாய்...
மொழி மீது கொண்ட காதலை
கவிஞன் சொல்லிவிடுகிறான் கவிதையாய்...
உன் மீது கொண்ட காதலை
நான் சொல்லிவிடுகிறேன் மௌனமாய்...
நீ மௌனம் எனும் மொழி புரிவாயா?
இல்லை என்றால் இதோ
சொல்கிறேன் என் மொழியாய்....
Wednesday, 10 February 2010
கடற்கரை தருணங்கள்

நேற்று நீ என்தோள் சாய்கையில் உன் வெட்கி சிவந்த முகமே என் முன் காட்சியாய் தோன்றிட எனக்குள்ளே சிலிர்த்துக்கொண்டேன்.
"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா வேலை கவிதா"
என்றபடி கண்களை மூடிய கைகளை விலக்க முயற்சிக்காமலே அமர்ந்திருந்தேன். கைகளை நீயாகவே எடுத்துவிட்டு என் தலையில் ஒரு குட்டு...
மென் கோபம் உன் கண்களில் தெரிந்திட ஓர் அதட்டும் பாணியில் நீ கேட்டாய்....
"யாரவள் எனக்கு தெரியாமல்?"
சிறு ஏளனப்புன்னகையுடன் நான்...
"உன்னைத்தவிர வேறு யாரும் என் கண்களை மூடப்போவதில்லை எதற்கு இந்த வேண்டா கேள்வி"
என்றேன். புரிந்தவளாய், சிணுங்கினாய் நீ... ரசித்தேன்.
"மன்னித்துக்கொள் இன்று 'கொஞ்சம்' நேரமாகிவிட்டது. நீ வந்து கனநேரமோ..?"
"இல்லை இப்பதான் 'கொஞ்ச' நேரம்..... மூன்று மணிக்கு வந்தனான்"
"அடப்பாவி இது உனக்கு கொஞ்ச நேரமோ? ஐந்து மணிக்கு தானே வருவதாய் சொன்னாய்....."
உனக்காக நீண்ட நேரம் காத்திருக்கலாம் என்றுதான்...."
நீ என்தோள் சாய்கிறாய்...... வானம் சிவந்திருந்தது....
காதல் நோய்கள்

இதயத்தை புற்று நோய்
தாக்குவதில்லை
ஏன் என்றால்
நீ அங்குதான்
தங்கியிருக்கிறாய்...
மாரடைப்பு
என் இதயத்தில்
இருந்த நீ
கடித்து துப்பிய
நகங்கள்
அடைத்துக்கொண்டது
நாளங்களை...
தும்மல்
நீ அருகில்
என் நுரையீரல்
காற்றெல்லாம்
புகுந்து கொள்ள
பேராசைப்படுகிறது...
ஆஸ்துமா
உன் மூச்சுக்காற்று
கலவாத காற்றை
சுவாசிக்கும் போது
என்னை
தொந்தரவு செய்கிறது...
வாந்தி
உன்னை நினைக்காமல்
உண்ட உணவெல்லாம்
சமிபாடு அடையுதில்லை...
மூச்சடைப்பு
என் மூச்சுக்குழாய்
அளவு போதவில்லை
உன்னக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பதற்கு...
Monday, 8 February 2010
மனதில் பதிந்த பாடல் ஒன்று...
பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே
சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன்வளைந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழிகின்றோம் உடையகோனே
நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல்கருதி நீ எம்தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ
பெம்மானே! பேருலகின் பெருமானே!!
ஆண்டஇனம் மாண்டழிய அருள்வாயோ?
பிரதி எடுக்கப்பட்ட தளம் (http://pachaitamilan.blogspot.com/2009/06/blog-post_24.html)
ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரைப்படத்தில் இருந்து...
Sunday, 7 February 2010
காதல் குருடன்
நான் கண்ணிமைக்கும் கணங்கள் கூட
கண்களுக்குள் கனவாய் வருகிறாயே...
என் கண்ணிமைகள் களவாடி சென்றாயோ...
கண்ணிமைகளை திறந்தாலும் மூடினாலும்
ஒரே காட்சியாய் நீயே தெரிகிறாயே...
என் கண்களுக்கு ஓய்வின்றி போனதுவோ...
கண் விழித்தாலும் அயர்ந்தாலும்
உன் பிம்பத்தையே மூளைக்கு அனுப்புகிறதே...
என் கண்களுக்குள் நீ விழுந்துவிட்டாயோ...
கண்கள் வேறு காட்சி காணாமல்
மறைத்து நிற்கிறாயே...
என் கண்கள் என்ன தவம் செய்ததுவோ...
உன் உருவம் கண்டு
பிறந்த பயன் அடைந்து விட்டதுவே...
என் கண்கள் இனி குருடாய் போனாலும்
அவை அனுப்பிய உன் பிம்பம்
என் உடலின் ஒவ்வொரு செல்களிலும்
அழியாச்சுவடுகளாய்....
Thursday, 4 February 2010
குட்டுப்பட்ட கூட்டம்!!
குட்டப்பட்ட கூட்டம் எழுந்தது ஒரு கட்டம்!
திடுக்கிட்டது குட்டிய கூட்டம்
தீட்டியது பல சதித்திட்டம்!
உடைத்தெறிந்தான் திட்டமெல்லாம்
குட்டுப்பட்ட கூட்டத்தில் ஒருவன்!
தளரவில்லை குட்டுப்பட்ட கூட்டம்
மீண்டும் மீண்டும் எழுந்தது!
விட்டுவிட்டது குட்டுவதை குட்டிய கூட்டம்
விடவில்லை தொடர்ந்து குட்டும் எண்ணத்தை!
மீண்டும் குட்டினால்
குட்டுப்பட்ட கூட்டம் வீழ்ந்துவிடுமா?
இல்லை எழுந்து வருமா?
சி(க)ல்லறைக்கனவு
ஆனால்
சில்லறைகளால் சில்லறைத்தனமானவர்கள்
கல்லறை வருவார்கள்!!!
சில சில்லறை சேர்ப்பவர்கள்
கல்லறை சேரப்போவதை மறந்தவர்கள்...
அவர்கள்
சில்லறைகளால் எதையும் செய்ய நினைப்பவர்கள்
ஆனால்
கல்லறைகளை அவர்கள் தவிர்த்துவிட முடியாது!!!
சில்லறைகள் என்றும் நிலைப்பதில்லை
கல்லறைகளே நிரந்தரமானவை...
சில்லறைகள், கல்லறை போகும் பாதையில்
சிதறி கிடக்கும்
சிற்றின்பமே...
அது கல்லறை வரை வரும் என்று
சில்லறைத்தனமாக கனவு காணாதே!!!
Thursday, 28 January 2010
வருடத்தில் ஒருநாள்
உன்னை முதன் முதலாய் தாலாட்டிய நாள் இன்றல்லவா..
என் மொழி
Monday, 25 January 2010
காதல் கோடு
என் காதல் ஆனதுவோ....?
கல்லிற்கு எறும்பு ஊர்வது தெரிவதில்லை
எறும்புக்கு தான் கல்மீது போடும் கோடும் தெரிவதில்லை...
அதுபோலவே
தினம் நீ என்னை கடந்து சென்ற போதும் காதலில்லை
என்மீது நீ போட்ட காதல் கோடு உனக்கும் தெரியவில்லை
உன்னை சில நாள் காணாத போது உன்மீதிருக்கும் காதல்,
கல்மீது எறும்பு போட்ட கோடு போலல்லவா
என்மனதில் அழியாமல் இம்சிக்கின்றது!!!
நீயும் நானும்
தவளையாகிவிடு
உன்னை என் இலைகளில் தாங்கிடுவேன்
நான் மண்ணாகினால் நீ விண்ணாகிவிடாதே...
மேகமாகிவிடு
நீ மழையாய் பெய்யும் போது என்னுள் ஊறிவிடுவாய்
நான் நீரானால் நீ ஆறாகிவிடாதே...
குளமாகிவிடு
நான் ஓடிக்கொண்டிராமல் உன்னுள்லேயே தேங்கிடுவேன்
நான் கடலானால் நீ காற்றாகிவிடாதே...
உப்பாகிவிடு
என்னுள் நீ என்றும் கரைந்திருப்பாய்
நான் பழமானால் நீ பறவையாகிவிடாதே
வண்டாகிவிடு
எனக்குள்ளே நீ வாழ்ந்திருப்பாய்
நான் நீயானால் நீ நானாகிவிடாதே...
என் தாயாகிவிடு
அடித்தாலும் அணைத்தாலும்
உன்னைவிட்டு என்றும் பிரியேன்...!



