என்னை முதன் முதலாய் உன் மடியில் தாலாட்டியவள் நீ
உன்னை முதன் முதலாய் தாலாட்டிய நாள் இன்றல்லவா..
Thursday, 28 January 2010
என் மொழி
தினம் என் மனதில் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம். அவை காலத்திற்க்கு ஏற்ப வடிகட்டிய பின்னர் என் கருத்துகளாக மனதில் தேங்கிவிடும். சில எண்ணங்கள் மீட்டிப்பாக்காத போது மறந்துவிடுகின்றது. அவற்றில் சில வார்த்தைகளாக இன்னும் சில எழுத்துக்களாக மாறுகின்றது. அதுவே என் மொழியாகின்றது.
Monday, 25 January 2010
காதல் கோடு
கல் மீது எறும்பு ஊர்ந்த கோடு போல
என் காதல் ஆனதுவோ....?
கல்லிற்கு எறும்பு ஊர்வது தெரிவதில்லை
எறும்புக்கு தான் கல்மீது போடும் கோடும் தெரிவதில்லை...
அதுபோலவே
தினம் நீ என்னை கடந்து சென்ற போதும் காதலில்லை
என்மீது நீ போட்ட காதல் கோடு உனக்கும் தெரியவில்லை
உன்னை சில நாள் காணாத போது உன்மீதிருக்கும் காதல்,
கல்மீது எறும்பு போட்ட கோடு போலல்லவா
என்மனதில் அழியாமல் இம்சிக்கின்றது!!!
என் காதல் ஆனதுவோ....?
கல்லிற்கு எறும்பு ஊர்வது தெரிவதில்லை
எறும்புக்கு தான் கல்மீது போடும் கோடும் தெரிவதில்லை...
அதுபோலவே
தினம் நீ என்னை கடந்து சென்ற போதும் காதலில்லை
என்மீது நீ போட்ட காதல் கோடு உனக்கும் தெரியவில்லை
உன்னை சில நாள் காணாத போது உன்மீதிருக்கும் காதல்,
கல்மீது எறும்பு போட்ட கோடு போலல்லவா
என்மனதில் அழியாமல் இம்சிக்கின்றது!!!
நீயும் நானும்
நான் தாமரையானால் நீ சூரியனாகிவிடாதே...
தவளையாகிவிடு
உன்னை என் இலைகளில் தாங்கிடுவேன்
நான் மண்ணாகினால் நீ விண்ணாகிவிடாதே...
மேகமாகிவிடு
நீ மழையாய் பெய்யும் போது என்னுள் ஊறிவிடுவாய்
நான் நீரானால் நீ ஆறாகிவிடாதே...
குளமாகிவிடு
நான் ஓடிக்கொண்டிராமல் உன்னுள்லேயே தேங்கிடுவேன்
நான் கடலானால் நீ காற்றாகிவிடாதே...
உப்பாகிவிடு
என்னுள் நீ என்றும் கரைந்திருப்பாய்
நான் பழமானால் நீ பறவையாகிவிடாதே
வண்டாகிவிடு
எனக்குள்ளே நீ வாழ்ந்திருப்பாய்
நான் நீயானால் நீ நானாகிவிடாதே...
என் தாயாகிவிடு
அடித்தாலும் அணைத்தாலும்
உன்னைவிட்டு என்றும் பிரியேன்...!
தவளையாகிவிடு
உன்னை என் இலைகளில் தாங்கிடுவேன்
நான் மண்ணாகினால் நீ விண்ணாகிவிடாதே...
மேகமாகிவிடு
நீ மழையாய் பெய்யும் போது என்னுள் ஊறிவிடுவாய்
நான் நீரானால் நீ ஆறாகிவிடாதே...
குளமாகிவிடு
நான் ஓடிக்கொண்டிராமல் உன்னுள்லேயே தேங்கிடுவேன்
நான் கடலானால் நீ காற்றாகிவிடாதே...
உப்பாகிவிடு
என்னுள் நீ என்றும் கரைந்திருப்பாய்
நான் பழமானால் நீ பறவையாகிவிடாதே
வண்டாகிவிடு
எனக்குள்ளே நீ வாழ்ந்திருப்பாய்
நான் நீயானால் நீ நானாகிவிடாதே...
என் தாயாகிவிடு
அடித்தாலும் அணைத்தாலும்
உன்னைவிட்டு என்றும் பிரியேன்...!
Subscribe to:
Posts (Atom)