Wednesday, 7 July 2010

லூசுப்பையன் லூசுப்பொண்ணு

நீண்ட நாட்களாக கண்டது முதல் காதல் கொண்டு அவளின் பின்னால் அலைந்து திரிகிறான் ஒரு லூசுப்பையன். அவளிடம் பலமுறை தன் காதலை சொல்லிவிடுகிறான். ஆனால் அவனை தொடர்ந்து நிராகரித்து வருகிறாள் இந்த லூசுப்பொண்ணு. ஒரு நாள் வழமை போல தன் காதலை சொல்ல அவளை சந்திக்கிறான்...

லூ. பை :- ஹே.. கொஞ்சம் நில்லு. நான் உங்கிட்ட பேசணும்.

லூ. பொ :- ஹையோ... என்ன பேசணும்??? அதே வழமையான பல்லவி தானே...

லூ. பை :- அது இல்ல.. நான் இனிமேல் உன்னை லவ் பண்ணல!

லூ. பொ :- உண்மையாவா சொல்லுறாய்?

லூ. பை :- சத்தியமா சொல்லுறன் நான் இனிமேல உன்னை லவ் பண்ணமாட்டேன்.

லூ. பொ :- அப்பாடா... தொல்லை விட்டது... குட் பாய்.. (நல்ல பையன் இல்லைங்க.. good bye!!)

லூ. பை :- ஆனா நான் உன்னை காதலிக்கிறேன்...

லூ. பொ :- ஐயோ.. கடவுளே நீ உண்மையாவே லூசுதாண்டா

லூ. பை :- எனக்கு உன்மேல லவ் என்றால் நீ என்னை மறுத்த முதல் நாளே நான் உனக்கு நீ சொன்ன அதே good bye ஐ சொல்லிவிட்டு போயிருப்பேன்.
ஆனா இன்னும் உன் பின்னாடி வரேன் என்றால் அது காதலால் தான்...

லூ. பொ :- உங்களை எல்லாம் திருத்த(வே) முடியாது...

லூசுப்பொண்ணு முறைத்துக்கொண்டு செல்வதை வழக்கம் போல பரிதாபமாய் பார்த்துகொண்டிருந்தான் லூசுப்பையன்....!

No comments:

Post a Comment