நான் தாமரையானால் நீ சூரியனாகிவிடாதே...
தவளையாகிவிடு
உன்னை என் இலைகளில் தாங்கிடுவேன்
நான் மண்ணாகினால் நீ விண்ணாகிவிடாதே...
மேகமாகிவிடு
நீ மழையாய் பெய்யும் போது என்னுள் ஊறிவிடுவாய்
நான் நீரானால் நீ ஆறாகிவிடாதே...
குளமாகிவிடு
நான் ஓடிக்கொண்டிராமல் உன்னுள்லேயே தேங்கிடுவேன்
நான் கடலானால் நீ காற்றாகிவிடாதே...
உப்பாகிவிடு
என்னுள் நீ என்றும் கரைந்திருப்பாய்
நான் பழமானால் நீ பறவையாகிவிடாதே
வண்டாகிவிடு
எனக்குள்ளே நீ வாழ்ந்திருப்பாய்
நான் நீயானால் நீ நானாகிவிடாதே...
என் தாயாகிவிடு
அடித்தாலும் அணைத்தாலும்
உன்னைவிட்டு என்றும் பிரியேன்...!
No comments:
Post a Comment