காதலும் கவிதையும் உன்னாலே
கனவும் கற்பனையும் அதனாலே
காற்றாய் நீ நுழைந்தாய் என் நெஞ்சிலே
காதலாய் மாறினாய் அஞ்சு நொடியிலே
விதையாய் முளைத்தேன் முதல் பார்வையிலே
மரமாய் வளர்ந்தேன் மறு நாளே
காதலும் கவிதையும் உன்னாலே
கனவும் கற்பனையும் அதனாலே
நிலவாய் நீயும் புகுந்தாய் என் இரவிலே
வெட்கம் கொண்டு ஒளிராமல்
ஒழிந்தாய் யார் நிழலிலே
நீலக்கரு மேகமாய் சூழ்ந்தாய் என் வானிலே
மாரி போல் பொழிந்தாய் கோடையிலே.