முழுநிலவாய் நீ முகமலர்ந்த போதா
முத்துப்பற்களால் நீ சிரித்த போதா
முகம் பார்க்க நீ தலை குனிந்த போதா
முகவரி தொலைந்த பிள்ளை முகம் போல
நீ முழித்துக்கொண்டிருந்த போதா
மூழ்கிப்போனேன் நான் உனக்குள்.......
---------------------------------------------------------------------------
உன் முகம் பார்த்து விழிக்கும் காலைகள்
உன்னோடு ருசிக்கும் தேநீர் மாலைகள்
உன் கைகோர்த்து நடக்கும் சாலைகள்
உன் தோல் சாய்ந்து கிடக்கும் கடற்கரைகள்
எல்லாம் எப்போது தருவாய் என்று காத்திருக்கிறேன்.....
No comments:
Post a Comment