என் கண்ணிமைகளுக்குள் ஒளிந்து கொண்டாயோ...
நான் கண்ணிமைக்கும் கணங்கள் கூட
கண்களுக்குள் கனவாய் வருகிறாயே...
என் கண்ணிமைகள் களவாடி சென்றாயோ...
கண்ணிமைகளை திறந்தாலும் மூடினாலும்
ஒரே காட்சியாய் நீயே தெரிகிறாயே...
என் கண்களுக்கு ஓய்வின்றி போனதுவோ...
கண் விழித்தாலும் அயர்ந்தாலும்
உன் பிம்பத்தையே மூளைக்கு அனுப்புகிறதே...
என் கண்களுக்குள் நீ விழுந்துவிட்டாயோ...
கண்கள் வேறு காட்சி காணாமல்
மறைத்து நிற்கிறாயே...
என் கண்கள் என்ன தவம் செய்ததுவோ...
உன் உருவம் கண்டு
பிறந்த பயன் அடைந்து விட்டதுவே...
என் கண்கள் இனி குருடாய் போனாலும்
அவை அனுப்பிய உன் பிம்பம்
என் உடலின் ஒவ்வொரு செல்களிலும்
அழியாச்சுவடுகளாய்....
No comments:
Post a Comment