மரத்தைப்பார்த்து.....
அது உதிர்க்கும் பூக்களை
நீ மிதிக்காமல் எட்டி எட்டி நடந்து செல்லும்போதும்,
மழை ஓய்ந்த பின் குடையின்றி செல்லும் உன்மீது
இலைநீரை அது தெளிக்கும்போதும்,
அதன் கிளைகளை ஸ்பரித்து வரும்
காற்றை நீ சுவாசிக்கும் போதும்,
பொறாமைப்படுகிறேன்
அந்த மரமாய் நான் பிறந்திருக்கலாமே என்று.....