ஏங்கி தவிக்கும் என் விரல்கள்
நீ தொலைவான போது உன்னைத்தொடாமல், தொட
வெட்கி நிற்கும் என் அதே விரல்கள்...
நீ சிரிக்கும் போது உன் எதிரில் சுவர் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள் ஏனென்றால்
நீ சிந்தும் சிரிப்புகள் எதிரொலியாய் சிதறும் போது கதறுகிறது என் மனது
எதை சேகரிப்பது என்று தெரியாமல்.. உன் சிரிப்பையா இல்லை சிவரின் சிரிப்பையா...
இன்னொரு தடவை பூந்தோட்டத்தில் என்னை சந்திக்க வராதே.
நீ சென்ற பின்பும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
நீ அருகிருந்த பூச்செடியிடம் நீயென நினைத்து...
உன்னிடம் நான் ஏதோ ஒன்று குறும்பாய் சொல்ல நீயோ "போடா பொறுக்கி" என்கிறாய்.
நான் ரகசியமாய் நீ சிந்தும் புன்னகை பூக்களை பொறுக்கும் பொறுக்கி என்ற உண்மை உனக்கு எப்படி தெரிந்தது?
ஓவிய கண்காட்சிக்கு சென்ற போது நீ அங்கிருக்கும் ஓவியங்களை பிரமித்து பார்த்துக்கொண்டிருந்தாய். நானோ உன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென என் பக்கம் திரும்பிய நீ சிரித்துக்கொண்டே என்ன என்பது போல் பார்த்தாய். ("ஓவியங்களை விட நீயே அழகாய் இருகிறாய்" என்ற பதிலை நீ எதிர்பார்த்திருப்பாய் போல) "ஓவியத்துக்குள் ஓவியம் இன்றுதான் நான் காண்கிறேன்" என்பதை அறியாத நீ.
புத்தகத்துக்குள் மயிலிறகு வளர்க்கும் சிறுவனிடம் மயிலிறகு ஒன்றை தருமாறு கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
விசித்திரமாய் பார்த்த நீ எதுக்கு இந்த வயதில் உனக்கு மயிலிறகு என்றாய்?
மயிலிறகால் மை தொட்டு மையலே உன் பெயரெழுததான்..
எங்கே, பேனாவினால் உன் பெயரெழுதினால் உனக்கு வலிக்குமோ என்றுதான் என்றேன்.