Monday, 29 March 2010

என்னிடம் இல்லா நாட்கள்


ஹோர்மோன்கள் சீராகத்தான் வேலை செய்கின்றன.
உறக்கமின்றி களைத்திருந்தாலும் உடல் துடிப்பாகவே இயங்குகின்றது.
கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியிருக்கின்றது.
ஒவ்வொரு கண்ணிமைக்கும் நேரத்திலும் தூங்கி எழுகின்றேன்.
வழமையை விட கண் அதிகமாகவே இமைக்கின்றது.
உண்ணாமலே உடல் உழைகின்றது.
உண்பதற்கு உண்மையிலேயே மறந்துவிட்டேன்.
உண்டியையும் மூச்சுக்காற்றால் நிரப்புகின்றேன்.
இரவையும் பகலையும் பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.
இரண்டும் கலந்த வினோத நாட்களாக நகர்கின்றன நாட்கள்.
மூளையின் அனைத்து கட்டுப்பாட்டு மையமும்
கட்டுப்பாட்டை இழந்து விட்டது.
கட்டையை சுற்றி வரும் காளை போல
ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகிறது எண்ணங்கள்.
எல்லாம் எதனால்...

No comments:

Post a Comment