பூ மீது கொண்ட காதலை
காற்று சொல்லிவிடுகிறது தென்றலாய்...
புல் மீது கொண்ட காதலை
இரவு சொல்லிவிடுகிறது பனித்துளியாய்...
புவி மீது கொண்ட காதலை
நிலவு சொல்லிவிடுகிறது பௌர்ணமியாய்...
மண் மீது கொண்ட காதலை
விண் சொல்லிவிடுகிறது மழையாய்...
கரை மீது கொண்ட காதலை
கடல் சொல்லிவிடுகிறது அலையாய்...
கல் மீது கொண்ட காதலை
சிற்பி சொல்லிவிடுகிறான் சிலையாய்...
மொழி மீது கொண்ட காதலை
கவிஞன் சொல்லிவிடுகிறான் கவிதையாய்...
உன் மீது கொண்ட காதலை
நான் சொல்லிவிடுகிறேன் மௌனமாய்...
நீ மௌனம் எனும் மொழி புரிவாயா?
இல்லை என்றால் இதோ
சொல்கிறேன் என் மொழியாய்....
No comments:
Post a Comment