காலையில் நீ தினமும் கண்விழிக்கும் போது
கண்ணாடி அணிந்து கொள்.. என்றேன்
ஏன் என்கிறாய்?
வண்டுகளும் தேனீக்களும்
உன் கண்களுக்குள் புகுந்து விடாதா என்ன...
சாலையில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களை மிதிக்காமல்
நீ எட்டி எட்டி நடந்து வருகிறாய்...
ஆனால் நீயேன் அறியவில்லை
ஒரு பூ மிதித்து இன்னொரு பூவுக்கு எப்படி வலிக்கும் என்று...
உலக சமாதானத்தைப்பற்றி பேசிய ஒருவர் சொன்னார்
உலகத்தை வெள்ளைப்பூக்களால் நிரப்புங்கள் என்று...
மறுநாளே நான் நிரப்பிவிட்டேன்
உனக்கொரு வெள்ளை நிற சுடிதார் வாங்கித்தந்து...
காதலர் தினத்தில் காதலிக்கு பூக்கொடுப்பவர்களை
கண்டு கோவப்பட்டேன் பொறாமையால் அல்ல
பூவுக்கே பூச்செண்டா?
No comments:
Post a Comment