வாழ்கையில...
விழுகிற ஒவ்வொரு அடியும்
ஏறிப்போற படி மாதிரி.
எவ்வளவு அடி விழுகுதோ
அவ்வளவு மேல நாங்க போவோம்...
ஆனா இடி விழுந்தா
ஒரேடியா மேல போயிடலாம்!!!
குழம்பின குட்டையில மீன் பிடிக்கமுடியாது என்று சொன்னங்க....
நானும் குட்டை தெளியிர வரைக்கும் காத்திருந்து வலையை விசினேன்.
ஆனால் மீன் பிடிபடவில்லை. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தேன்.
"மீன் இல்லாத குட்டையிலையும் மீன் பிடிக்கமுடியாது!!!"
முதல் தடவை விமானத்தில் பறக்கும் போது
உயரத்தில் நான் இருப்பதை எண்ணி பெருமை கொண்டேன்.
ஆனால் விமானம் என்னதான் ஆயிரம் அடி உயரத்துல பறந்தாலும்
விமானநிலையம் வந்தா கீழே இறங்கித்தான் ஆகணும்!!!
நேற்று கிடைச்சது இன்னைக்கு கிடைக்காது
இன்னைக்கு கிடைக்கிறது நாளைக்கு கிடைக்கபோறதில்லை
நாளைக்கு கிடைக்கபோறது என்றைக்கும் கிடைத்துக்கொண்டிருக்காது.
அதனால கிடைக்கிறத கிடைச்ச அன்னைக்கே அனுபவிச்சா கிடைச்ச அந்த சந்தோசம் மட்டும் என்னைக்கும் கிடைக்கும்!!!
வாழ்ந்த அனுபவத்தின் மூலம் சொல்பவனின் தத்துவத்தில் பல அடிகள் இருக்கும்
ஆனா சும்மா பொழுது போகாம சொல்லுர தத்துவத்தில் பல கடிகள் தான் இருக்கும்!!!
நீங்க நல்லா குழம்பி இருக்கீங்க
ReplyDelete